Thursday 22 August 2013

கோவை பிரதர்ஸ் படத்தின் காமெடி


   படம் : கோவை பிரதர்ஸ்


வடிவேலு சத்தியராஜ் கலகலப்பு காமெடி காட்சிகள்..............




வடிவேலுவின் பெஸ்ட் கலக்சன் காமெடி சீன்கள்......................

கணா கண்டேன் காமெடி





விவேக்கின் காமெடி காட்சிகள்...................

படம் : கணா கண்டேன்

விவேக்கின் தத்துவம்






விவேக்கின் தத்துவம்  கலந்த சிரிப்பு மத்தாப்பு

படம் : காதல் கிசு கிசு


வடிவேலு கலாட்டா




வ்டிவேலுவின் கல்யாண கல கல கல காமெடி



வடிவேலுவின் கிணறு காணம் சிரிப்பு



வடிவேலுவின் கிணறு காணம் சிரிப்பு........................
சிரிப்பொலி தொலைகாட்சி காட்சி






கலகல காமெடி



கலகலப்பான கவுண்டமனியின் சிரிப்பு...................
படம் : ஜெய்ஹிந்த்

கவுண்டமணி காமெடி




கவுண்டமணியின் கலகல்ப்பு
படம் : மாமணிதன்

செந்தில் கவுண்டமணி சிரிப்பொலி


செந்தில் கவுண்டமணி சிரிப்பொலி

ரசியுங்கள் ...............

படம்

நம்ம ஊரு புவாத்தா




அண்ணாமலை ரெக்கை கட்டி பறக்குதைய்யா பாடல்







அண்ணாமலை ரெக்கை கட்டி பறக்குதைய்யா பாடல்

சூப்பர் ஸ்டார் குஸ்புவின் பாடல்

பல்லை பாதுகக்க சில டிப்ஸ்

1186217_357472961052430_841334264_n.jpg
சாப்பிட்டவுடன் பல் துலக்குவது தவறு. பழங்கள்,குளிர் பாணங்கள்,ஒயின்,அமில தன்மை கொண்ட உணவு வகைகள் சாப்பிட்டவுடன் பல் துலக்கினால் பல் பாதிப்பு அடையும்.

உணவு பொருள்களில் இருக்கும் அமிலம் பல்லின் எனாமல் பகுதியை சற்று மிருதுவாக மாற்றி இருக்கும் அந்த நேரத்தில் பிரஷ் கொண்டு பல் துலக்கினால் பல்லின் எனாமல் தேயக்கூடும்.

சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் காத்திருந்தால் நம் வாயில் சுரக்கும் உமிழ் நீர் அந்த அமிலத்தை சமன் செய்து விடும்,அதன் பிறகு நீங்கள் பல் துலக்கினால் பல்லின் எனாமலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

அதே போல் சூடாக தேநீர் அருந்தியவுடன் குளிர்பானம் குடித்தாலும்
பல்லின் எனாமலில் விரிசல் ஏற்படும் அதன் மூலம் பல் கூச்சம் உண்டாகும்.

சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பல் துலக்குவது நன்று.காலை மாலை இருவேளையும் பல் துலக்குங்கள்.

சமையல் குறிப்புகள் :

பால் கெடாமல் இருக்க...

பால் வைக்கும் பாத்திரம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பால் கெடாமல் இருக்கும். பாலுடன் இரண்டொரு நெல் மணிகளைப் போட்டு வைத்தால், காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்கும்.


சமையல் குறிப்புகள் - அரிசி குருணையில் உப்புமா செய்தால் ...


அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.

சமையல் குறிப்புகள் - மோர் மிளகாய் தயாரிக்கும்போது...


மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.

சமையல் குறிப்புகள் - காய்கறிகள் நறுக்கத் தொடங்குமுன்...
காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.

சமையல் குறிப்புகள் - கிரேவி வகையறாக்கள் செய்யும்போது ...
 கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.

சமையல் குறிப்புகள் - காய்கறிகளில கசப்பு சுவை நீங்க...
 காய்கறிகளில் சில காய்கள் கசப்பு சுவையுள்ளவை. அவற்றை நறுக்கி அரிசி களைந்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கிவிடும்.

சமையல் குறிப்புகள் - இட்லி மிருதுவாக இருக்க...

 இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வார்க்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக இருக்கும். இரண்டு தினங்களுக்குக் கெடாமல் இருக்கும். பிரயாணங்களுக்கு உகந்தது.

சமையல் குறிப்புகள் - இட்லி மணமாக இருக்க...

காய்ந்து போன கறிவேப்பிலை, கொத்துமல்லி இலைகளை இட்லிச் சட்டி நீரில் போட்டு இட்லிவேக வைத்தால் இட்லி மணமாக இருக்கும்.

சமையல் குறிப்புகள் - ஜவ்வரிசி கிளரும்போது...

ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.


சமையல் குறிப்புகள் - எண்ணெய்க் காறலை போக்க...

எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.

சமையல் குறிப்புகள் - தயிர் புளிக்காமல் இருக்க...

தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.


சமையல் குறிப்புகள் -  வெண்டைக்காய் சமைக்கும்போது...

வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.


சமையல் குறிப்புகள் - அரிசி உப்புமா செய்யும்போது...

அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.

சமையல் குறிப்புகள் - கீரையை வேகவிடும்போது ...

 கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
சமையல் குறிப்புகள் - குழம்பில் தேங்காய் பயன்படுத்தும்போது..

தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.


சமையல் குறிப்புகள் - வெங்காய அடை செய்யும் போது...

வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.


சமையல் குறிப்புகள் - பூரிக்கு மாவு பிசையும்போது ...

பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

சமையல் குறிப்புகள் - அடை செய்யும்போது ...

அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.

Wednesday 21 August 2013

சாதா பூரி சாப்பிட்டு சலித்துவிட்டதா

சாதா பூரி சாப்பிட்டு சலித்துவிட்டதா? சுவையான பருப்பு பூரி செய்து சாப்பிடுங்கள். இதோ உங்களுக்கான செய்முறை...


என்ன தேவை?

கோதுமை மாவு - 1 ஆழாக்கு
பாசிப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையானது
மிளகு - 1/4 தேக்கரண்டி பொடித்தது
சீரகம் - 1/4 தேக்கரண்டி பொடித்தது

எப்படி செய்வது?

பருப்புகளை ஊற வைத்து விழுதாக அரைக்கவும்.

அரைத்த விழுதுடன் மற்ற பொடிகளைக் கலந்து, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.

கோதுமை மாவைப் பிசைந்து பூரியாக இட்டு, வதக்கி வைத்த விழுதைச் சிறிது எடுத்து வைத்து மூடிவிடவும். எண்ணெயில் பொரிக்கவும்.

இதே முறையில் உருளைக்கிழங்கை வேக வைத்து, பூரியை இட்டு உள்ளே மூடிவிட்டுப் பொரிக்கலாம்.

காய்கறிகளையும் அரிந்து வேகவிட்டு உள்பக்கம் வைத்தும் செய்யலாம்.

சமையல் சிறு குறிப்புகள்

தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை‌த் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.


எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.


காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.


பாலை காய்ச்சுவதற்கு சமையல் குறிப்பு

பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தி‌ல் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.

முட்டையை வேக வைக்கும் போது சமையல் குறிப்பு

முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீ‌ஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.

கத்திரிக்காய் பிரியாணி

சமையல்:கத்திரிக்காய் பிரியாணி

Brinjal Biryani - Cooking Recipes in Tamil

கத்திரிக்காயில் பிரியாணியா என்று ஆச்சர்யமாய் இருக்கிறதா? நெசமாத்தாங்க.. கத்திரிக்காயில் பிரியாணியும் செய்யலாம் தெரியுமா... கத்திரிக்காயை கண்டால் காததூரம் ஓடுறவுங்ககூட கத்திரிக்காய் பிரியாணியை சாப்பிட்டு பார்த்தால் விடவே மாட்டாங்க... அந்தளவுக்கு இதன் ருசிக்கு அனைவரும் அடிமையாகிவிடுவோம்னா பாத்துக்கோங்களேன்!

தேவையான பொருட்கள்:

பெரிய கத்திரிக்காய் - 1
பாஸ்மதி - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 6
பால்(அ)தேங்காய்ப்பால் - 3 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்
சோம்பு - 1 டீ ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி
உப்பு-எண்ணெய் - தேவைக்கு

வறுத்து பொடிக்க:

ஏலக்காய் - 3
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 4
பிரியாணி இலை - 2

செய்முறை:

* வெங்காயம்-தக்காளி நறுக்கவும். பச்சை மிளகாயை கீறவும். கத்திரிக்காயை நீளவாக்கில் அரியவும்.

* அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பின் நீரில்லாமல் வடித்து 1/2 டேபிள் ஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

* குக்கரில் எண்ணெய் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம்-தக்காளி-பச்சை மிளகாய்-இஞ்சி பூண்டு விழுது-வறுத்து பொடித்த பொடி-கத்திரிக்காய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

* பிறகு உப்பு-மஞ்சள்தூள்-அரிசி-எலுமிச்சை சாறு-புதினா கொத்தமல்லி சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

* குறிப்பு: இதற்கு உருளை வறுவல் பெஸ்ட் காம்பினேஷன்.

சமையல் குறிப்புகள் முட்டை பிரியாணி

முட்டை பிரியாணி

தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 2 ஆழாக்கு
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
புதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு
பச்சை மிளகாய் – 4
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
தயிர் – 1 குழிக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1/2 குழிக்கரண்டி
தாளிக்க – பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை
செய்முறை
* முட்டையை வேக வைத்து `கட்` செய்து கொள்ளவும். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை கீறிக்கொள்ளவும்.
* அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் (தேவைப்படுபவர்கள் டால்டா சேர்க்கலாம்) ஊற்றி, காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.
* பின் வெங்காயம், தக்காளி, மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலை இவைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும்.
* தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கிளறவும். தயிர் சேர்க்கவும்.
* இத்துடன் அரிசியையும் சேர்த்துக் கிளறவும். அரிசியைப்போல் ஒன்றரை மடங்கு நீர் ஊற்றவும். (சாதாரண பச்சரிசிக்கு இருமடங்கு நீர் ஊற்றவும்), அரிசி வெந்து வரும் சமயம் நறுக்கிய முட்டை துண்டுகளை மேலே சேர்த்து தம் கட்டி மூடிவிடவும். உப்பை சரி பார்த்து இறக்கவும்.

ஆன்லைன் ஜாப்

அனுஷ்கா, ஹன்சிகா மோதலா?

அனுஷ்கா, ஹன்சிகா மோதலா? -டைரக்டர் ஹரி


0eb974f6-9caf-45fc-89c6-ea6694ab6a8e_S_secvpfசூர்யாவின் சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ளனர். கதையில் யாருக்கு முக்கியத்துவம் என்பதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின.
இதுபற்றி சிங்கம் 2 படத்தின் டைரக்டர் ஹரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
அனுஷ்காவிடமும் ஹன்சிகாவிடமும் அவரவர் நடிக்க வேண்டிய கேரக்டர் பற்றி படப்பிடிப்புக்கு முன்பே சொல்லி விட்டேன். இருவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஒருவருக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இருவரும் ஒன்றாக நடிக்க வேண்டிய சீன்கள் இருந்தன. எந்த விதமன வருத்தமும் இன்றி நடித்தார்கள். இருவர் கேரக்டருமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக சிங்கம் 2 வை உருவாக்கியுள்ளோம். முதல் படத்தில் தொடர்ச்சியை பார்த்த மாதிரியே இருக்கும். சிங்கம் 2-ல் சர்வதேச பிரச்சினையை சொல்லி உள்ளோம். இதனால் ஹாலிவுட் வில்லன் டேனிஸ் சப்பானியை நடிக்க வைத்துள்ளோம். ஹாலிவுட் வில்லன்களை கொண்டு நம்மூர் சண்டையை போட வைத்துள்ளோம். சூர்யா போலீஸ் உயர் அதிகாரியாக வருகிறார். புத்திசாலித்தனமாக வில்லன்களை அவர் தாக்குவது கைதட்ட வைக்கும். சண்டைகள் படுவேகமாக இருக்கும்.
கடலில் நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் சூர்யா மோட்டார் படகை ஒட்டி செல்லும் சேசிங் காட்சி சீட் நுனிக்கு இழுக்கும் ஹெலிகாப்டரில் கேமரா வைத்து இதை எடுத்தோம். ரோடுகள், மக்கள் கூடும் இடங்களில் அதிக சீன்கள் எடுக்கப்பட்டன. கடலுக்குள் படகு, வள்ளம், கப்பல்களில் படப்பிடிப்பை நடத்தினோம்.
சூர்யா ஆபத்தான சீன்களிலும் டூப் போடாமல் நடித்தார். சந்தானம் காமெடி களை கட்ட வைக்கும். அனுஷ்காவுக்கும் சந்தானத்துக்கும் டூயட் பாடலும் படத்தில் உள்ளது. படம் திருப்தியாக வந்துள்ளது. மக்கள் ஜாலியாக ரசிக்கும் படமாக இருக்கும், அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

சிங்கம் 2-க்கு க்ளீன் ‘யு’

சூர்யாவின் சிங்கம் 2-க்கு க்ளீன் ‘யு’ சான்று… 2,400 அரங்குகளில் ரிலீஸ்!


  • surya-singam-2-first-look-poster-design-2சென்னை: சூர்யா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் சிங்கம் 2 படத்துக்கு தணிக்கைக் குழு எந்த வெட்டுமில்லாத யு சான்று வழங்கியுள்ளது.
எஸ் லக்ஷ்மண் குமாரின் பிரின்ஸ் பிக்சர் தயாரிப்பில், ஹரி இயக்கி வரும் படம் சிங்கம் 2. சிங்கம் 2 ஹரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா – ஹன்சிகா நடித்துள்ளனர்.
விவேக்கும், சந்தானமும் காமெடியில் கலக்கியுள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் வெளியாகியுள்ள பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தை சென்சார் குழுவினர் சமீபத்தில் பார்த்தனர். படத்தில் எந்த வெட்டுமில்லாமல் க்ளீன் யு சான்று அளித்தனர்.
ஜூலை 5-ம் தேதி இந்தப் படம் உலகமெங்கும் வெளியாகிறது. இதுவரை சூர்யாவின் எந்தப் படமும் வெளியாகாத அளவுக்கு 2400 தியேட்டர்களில் சிங்கம் 2 வெளியாகிறது.
தமிழகத்தில் மட்டும் 600 அரங்குகளுக்குமேல் படம் வெளியாகவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தாமினி சம்மதம்

பெற்றோருடன் செல்ல சேரன் மகள் தாமினி சம்மதம்!!


dham3_0_0_0_0காதல் விவகாரத்தில் சிக்கி கோர்ட் படியேறிய சேரனின் இரண்டாவது மகள் தாமினி, தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக நீதிபதிகளிடம் கூறியுள்ளார். தாமினியின் விருப்பத்தை ஏற்று நீதிபதிகளும் அவர் யாருடன் செல்ல விருப்பப்படுகிறாரோ அவருடனேயே செல்லலாம் என உத்தரவிட்டனர்.
திரைப்பட இயக்குனர் சேரனின் இளைய மகள் தாமினி, சென்னையைச் சேர்ந்த சந்துரு என்பவரை காதலித்ததால், பிரச்னையானது. காதலன் சந்துரு பக்கம் தாமினி திடீரென சேர்ந்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று, சேரன் மீது புகார் செய்ததால், பிரச்னை பரபரப்பானது. இதையடுத்து, “என் மகள் தாமினியை, எனக்கு எதிராக சந்துரு தூண்டி விட்டுள்ளார். காதலனுடன் அனுப்பினால், என் மகளின் உயிருக்கு ஆபத்து; அவளை காப்பாற்றுங்கள் என, போலீசில் சேரன் புகார் கொடுத்தார்.
  • கண்ணீர் பேட்டி
இதற்கிடையே சேரன் தனது மனைவி செல்வராணியுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து சந்துரு நல்லவன் கிடையாது, அவன் பல பெண்களை ஏமாற்றியுள்ளான். என் மூத்த பெண்ணிடமும் பேஸ்புக்கில் காதல் சொல்லி வலை விரித்துள்ளான். எனது சொத்துக்காகத்தான் அவன் நல்லவன் போல் நடித்து என் பெண்ணை ஏமாற்றியுள்ளான். ஒரு கெட்டவனுக்கு எப்படி என் மகளை நான் கொடுக்க முடியும், ஒரு தந்தையாக யாரும் இதை செய்ய மாட்டார்கள் என்று கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார். அதேபோல் சேரனுக்கு ஆதரவாக அமீர், கரு.பழனியப்பன், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட இயக்குநர்களும் சந்துருவை பற்றியும், சந்துருவின் குடும்பம் பற்றியும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
  • ஆட்கொணர்வு மனு தாக்கல்
இந்நிலையில் தாமினியை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சந்துருவின் தாயார்‌ சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன்படி தாமினியும் கோர்ட்டில் ஆஜரானார்.
  • காதலன் உடன் செல்ல விருப்பம்
அப்போது நீதிபதிகள் முன்பு ஆஜரான தாமினி, தான் காதலன் சந்துரு உடன் தான் செல்வேன், பெற்றோர் உடன் செல்ல விரும்பவில்லை என்று பிடிவாதமாக கூறினார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதுவரை தாமினியை அவர் படித்த பள்ளி தாளாளர் வீட்டில் தங்க வைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  • பெற்றோருடன் செல்ல விருப்பம்
இதனையடுத்து வழக்கு விசாரணை இன்று(ஆகஸ்ட் 21ம் தேதி) நீதிபதிகள் தனபாலன் மற்றும் செல்வம் ஆகியோரது முன்பு வந்தது. அப்போது ஆஜரான தாமினி, தான் பெற்‌றோருடன் செல்ல விரும்புவதாக கூறினார். இதற்கு சந்துருவின் தாயார் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை மதியத்திற்கு மேல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த வழக்கு பின்னர் மதியத்திற்கு மேல் தொடர்ந்து விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தாமினி யாருடன் செல்ல விருப்பப்படுகி‌றாரோ அவருடனே செல்லலாம் என உத்தரவிட்டனர்.
  • மனு தள்ளுபடி
மேலும் சந்துருவின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆர்யாவும் பெரிய ஹீரோ

இரண்டாம் உலகம் வெற்றி பெற்றால் ஆர்யாவும் பெரிய ஹீரோதானாம்!

images 
  • சினிமா உலகில் படங்களின் வெற்றிதான் நடிகர்களின் மார்க்கெட்டை தீர்மானிக்கிறது. அந்த வகையில் சமீபகாலமாக 100 கோடி 150 கோடி என்று மெகா பட்ஜெட்டில் தமிழ்ப்படங்களே உருவாகி வருகின்றன. அந்த மாதிரி படங்களில் நடிக்கும் நடிகர்களும் 30 முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள்.
  • இந்த நிலையில், தற்போது வளர்ந்து வரும் ஆர்யா சமீபத்தில்தான் கோடிகளை எட்டிப்பிடித்திருக்கிறார். இந்த நேரத்தில் அவர் நடித்துள்ள இரண்டாம் உலகம் படம் 60 கோடியில் தயாராகி உள்ளதாம். ஆனால் அவர் நடித்த தற்போதைய படங்கள் 10 முதல் 15 கோடிகள் வரைதான் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
  • இந்த நேரத்தில் திடீரென்று 60 கோடி பட்ஜெட் ஆர்யாவை நம்பி படமெடுத்திருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் செல்வராகவன். அதோடு அனுஷ்கா என்ற மெகா நடிகையும் படத்தில் இருப்பதால் எப்படியும் படத்தை வியாபாரம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் படவேலைகளை முடித்து விட்டு தற்போது வியாபாரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
  • அதனால் தனது கேரியரில் இரண்டாம் உலகம் முக்கியமான படம் என்று நினைக்கும் ஆர்யா, வியாபார ரீதியாக இப்படம் வெற்றி பெற்றால் நாமும் முன்னணி ஹீரோவாகி விடுவோம் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

டைரக்டர் சேரன் பேட்டி

என் மகளை வைத்து பணம் பறிக்க முயற்சி: டைரக்டர் சேரன் பேட்டி


  1. 396f881c-2d07-4a2c-88d3-64c5ba240da9_S_secvpfமகளின் காதல் விவகாரம் குறித்து டைரக்டர் சேரன் மனைவி செல்வராணியுடன் இன்று பகல் 12.30 மணிக்கு வடபழனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
  1. என் மனைவியை இதுவரை வெளி உலகுக்கு நான் அறி முகப்படுத்தியதில்லை. இப்போது அறிமுகம் செய்கிறேன். இதுதான் என் மனைவி. எனக்கு 2 மகள்கள். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். பணக்காரன் அல்ல. அப்பா தியேட்டர் ஊழியர். அம்மா ஆசிரியை. எனவே என் மகள்களுக்கு சினிமா பின்னணி, பணக்கார வாசனையும் வரக்கூடாது என்பதற்காக அவர்களை கவனமாக வளர்த்தேன்.
  1. மகளை தோழியாக பார்க்க வேண்டும், சுதந்திரமாக நடத்த வேண்டும், காதலித்தால் எதிர்க்க கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். நானும் என் மனைவியை காதல் திருமணம் செய்தேன். இன்று வரை என் இளைய மகளுக்கு நாங்கள் என்ன ஜாதி என்று சொன்னதில்லை. மூத்த மகள் விவரம் தெரிந்தவள். இளைய மகள் தாமினிக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தது. எனவே செல்லமாக வளர்த்தோம். அவருக்கு 18 வயதில் காதல் வந்தது. நாங்கள் எதிர்க்கவில்லை. படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்கிறோம் என்றோம். அதன்பிறகு பையனைப் பற்றி விசாரித்தோம். அவனது பின்னணி பயத்தை ஏற்படுத்தியது. இருதய நோயுள்ள தாயுடன் வாழ்ந்தான். வேலை இல்லை. நான் நேரில் பையன் (சந்துரு) குடும்பத்தினரை சந்தித்தேன். மாதம் 10, 15 ஆயிரம் சம்பளத்துக்கு வழி செய்து கொள். வாழ்க்கையில் முன்னேறிக்காட்டு. 3 வருடத்துக்குப்பின் திருமணம் செய்து வைக்கிறேன். அது வரை இருவரும் வெளியில் சுற்றாமல் இருங்கள் என்றேன். அதை ஏற்றுக் கொண்டான்.
  1. ஆனால் எனக்கு தெரியாமல் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் எனது மகளை எங்களுக்கு எதிராக தூண்டி விட்டான். சந்துருவிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. பேசாமல் இருந்தால் செத்து விடுவேன் என்று என் மகளையே என்னிடம் பேசச் செய்தான். உடனே நான் போன் செய்து அவனுடன் மகளை பேச வைத்தேன். எந்த அப்பனும் செய்யாததை செய்தேன். பிறகு அவன் நடவடிக்கைகள் வேறு மாதிரி இருந்தது. நிறைய பொய் பேசினான். என் மகளிடம் பேசக் கூடாது என்று சொன்ன நாட்களில் வேறு சில பெண்களுடன் இரவு வெகு நேரம் சந்துரு பேசி இருக்கிறான். அந்த ஆதாரங்களை திரட்டினோம்.
  1. என் மூத்த மகளிடமும் ‘‘ஐ லவ் யூ’’ என்று பேஸ்புக்கில் கூறியுள்ளான். 7, 8 பெண்களுடன் அவன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க தயார். நடத்தைகள் மோசம், பொருளாதாரத்திலும் திருப்தி இல்லை. பெண்களுடன் தகாத தொடர்பு. இதையெல்லாம் பார்த்த பிறகு ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும். அதுமட்டு மல்ல என் மகளிடம் உன் அப்பா படத்தில் நான் கதாநாயகனாக நடிக்க ஏற்பாடு செய் என்று கூறியுள்ளான்.
  1. எழில் இயக்கும் படத்தில் நடிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று மகளே என்னிடம் கூறினாள். என் மகளை வைத்து சொத்துக்களையும் பணத்தையும் பறிக்க திட்டமிட்டு இருப்பதை உணர்ந்தேன். அவனை அடிக்கவில்லை. கொலை மிரட்டல் விடுக்கவும் இல்லை. என் மகளே ஒரு கட்டத்தில் மனம் மாறி அவனை வேண்டாம் என்றாள். இப்போது திடீர் என்று அவளது மனதை மாற்றி மூளைச் சலவை செய்து எனக்கு எதிராக திருப்பி விட்டுள்ளான்.
இவ்வாறு சேரன் கூறினார்.
  1. டைரக்டர் அமீர் கூறும் போது, ‘‘சந்துரு நல்லவன் அல்ல. குடும்பமும் நல்ல குடும்பம் இல்லை. 3 பெண்கள் அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். நல்ல குடும்பம் என்றால் நானே சேர்த்து வைப்பேன். குடும்ப பின்னணியை உளவுத்துறை கண்டு பிடிக்க வேண்டும் என்றார். சேரனும், மனைவியும் அழுது கொண்டே பேட்டி அளித்தார்.

3 சிங்கங்கள்

சிங்கம் 2 இசை வெளியீட்டு விழாவில் 3 சிங்கங்கள்


  • 27-1369644272-1சென்னை: சிங்கம் 2 இசை வெளியீட்டு விழாவில் சிங்கம் படத்தின் கன்னடம் மற்றும் இந்தி ரீமேக்கில் நடித்த சுதீப் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ள சிங்கம் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி நடக்கிறது. இந்த பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளுமாறு சிங்கம் படத்தின் கன்னடம் மற்றும் இந்தி ரீமேக்குகளில் நடித்த சுதீப் மற்றும் அஜ்ய தேவ்கன் ஆகியோரை இயக்குனர் ஹரி அழைத்துள்ளாராம்.
மேலும் சிங்கம் படத்தை இந்தியில் ரீமேக் செய்த பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார். இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சுதீப்பும், தேவ்கனும் சம்மதம் தெரிவித்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.

உத்தரகாண்ட் வெள்ளத்துக்கு ரூ.10 லட்சம்

உத்தரகாண்ட் வெள்ளத்துக்கு ரூ.10 லட்சம்: நடிகர்கள் சூர்யா – கார்த்தி வழங்கினர்


  • 59c68a10-b954-48f3-8710-c610f2843118_S_secvpfநடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் இன்று நடந்தது.
  • விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2.5 லட்சம் பரிசு வழங்கினார்கள். ஏழை மாணவர்களுக்காக தாய் தமிழ் பள்ளிக்கு ரூ.1 லட்சமும் வாழை சமூக சேவை இயக்கத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கினர்.
விழாவில் சூர்யா பேசியதாவது:-
  • கடந்த 34 வருடமாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வேறு உதவிகளைவிட கல்விக்கு செய்கின்ற உதவி ஒருவருக்கு காலத்திற்கும் பயன்படும். அகரம் பவுண்டேசன் அடிதட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகிறது.
  • 650-க்கும் அதிகமான மாணவர்களின் கல்லூரி கனவை நனவாக்கி இருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை குழந்தைகளின் கல்விக்கு வழங்க வேண்டும். உத்தரகாண்ட் வெள்ளத்தில் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். நமது ராணுவத்தினர் திறமையாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
  • அந்த பேரழிவு 3, 4 ஆண்டுகளுக்கு நாட்டை பின்னோக்கி கொண்டு சென்று விட்டது என்கின்றனர். இதற்காக எங்கள் குடும்பம் சார்பில் ரூ.10 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.
இவ்வாறு சூர்யா பேசினார்.
  • சிவகுமார் மகள் பிருந்தா இறைவணக்கம் பாடினார். அகரம் பவுண்டேசன் செயலாளர் ஜெயஸ்ரீ, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பங்கேற்றனர்.

ஸ்ரீசாந்த் சினிமாவில் நடிக்கிறார்

கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த் சினிமாவில் நடிக்கிறார்


  • a9327fd1-75be-47ae-9ca7-d9cec174cbde_S_secvpfகேரளாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டப் புகாரில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
  • ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அவருடன் மேலும் 2 வீரர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களை தொடர்ந்து நாடு முழுவதும் சூதாட்டத் தரகர்களும் கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • ஒருவழியாக பல்வேறு தடைகளை தாண்டி ஸ்ரீசாந்த் ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது கொச்சியில் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வரும் ஸ்ரீசாந்த் சினிமாவில் நடிக்க இருக்கிறார்.
  • ஸ்ரீசாந்த் 2009-ம் ஆண்டிலேயே டைரக்டர் ஆஷிக் அபுவின் அறிமுகப்படமான “டாடி கூல்” படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவர் கிரிக்கெட்டில் ஜொலிக்கத் தொடங்கவே சினிமாவை ஒதுக்கினார்.
  • அதன்பின்னர் இன்னொரு பிரபல மலையாள இயக்குனரின் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் அவர் சூதாட்டப் புகாரில் சிக்கியதால் அந்த படமும் கிடப்பில் போடப்பட்டது.
  • இந்தநிலையில் “கவுபாய்” படத்தை இயக்கிய டைரக்டர் பி.பாலசந்திர குமார் அடுத்து இயக்க உள்ள “பிக் பிக்சர்” படத்தில் ஸ்ரீசாந்த் நடிக்க இருக்கிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகும் இந்த படத்தில் ஸ்ரீசாந்த்துடன் பிரகாஷ் ராஜ் மற்றும் பிரபு தேவா ஆகியோரும் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
  • படப்பிடிப்பை சென்னை, கொச்சி, துபாய் மற்றும் லண்டனில் நடத்த டைரக்டர் முடிவு செய்துள்ளார். ஸ்ரீசாந்தின் பாஸ்போர்ட் போலீசிடம் இருப்பதால் பிற நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் 2 படம்

நவீன தொழில் நுட்பத்தில் விஸ்வரூபம் 2 படம்: கமலஹாசன் தகவல்


  1. கமலின் விஸ்வரூபம் 2 படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதன் முதல் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசானது. இப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சீன்கள் இடம் பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து சர்ச்சைக்குரிய சீன்களை நீக்கிவிட்டு வெளியிட்டனர்.
  2. ‘விஸ்வரூபம் 2’ படத்தில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல்போஸ், சேகர் கபூர், நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கமல் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். தாய்லாந்து, பாங்காக்கில் இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது.
  3. மக்காவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் போஸ்டரை கமல் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:–
  4. நான் ரசிகர்களுக்காகவே படங்கள் எடுக்கிறேன். விளம்பரத்துக்காக இந்த தொழிலை செய்ய வில்லை. விஸ்வரூபம் படத்தின் கதையை ஆரம்பத்திலேயே இரண்டு பாகமாக எழுதினேன். ஒரு படத்தை ரிலீஸ் செய்த பிறகுதான் அதன் இரண்டாம் பாகம் பற்றி அறிவிப்பது வழக்கும். ஆனால் நான் படத்தின் முதல் பகுதியை எடுக்கும் போதே இரண்டாம் பகுதி பற்றி தெரிவித்து விட்டேன்.
  5. c06b07d3-d9ec-4071-aeb8-a427a74df0bc_S_secvpf
  6. முதல் பகுதி படப்படிப்பை நடத்தும் போதே இரண்டாம் பகுதியையும் படமாக்கினேன். என் நம்பிக்கை வெளிப்படுத்தும் படமாக இது இருக்கும். மனித உறவுகளின் உணர்ச்சிகள் இருக்கும். அத்துடன் அதிநவீன தொழில் நுட்பத்தில் இரண்டாம் பாகத்தை படமாக்குகிறேன். தண்ணீருக்கு அடியிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் காதலும் இருக்கும்.
  7. இவ்வாறு கமலஹாசன் கூறினார்.

கோச்சடையான் ரஜினி

  • கோச்சடையான் படத்துக்கு ரஜினி மேக்கப் போட்டார்: போட்டோ சூட்டிங் நடந்தது

  • ரஜினி நடிக்கும் `கோச்சடையான்’ படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இப்படத்துக்கான ரஜினி கெட்டப்பை போட்டோ எடுக்கும் சூட்டிங் சென்னையில் நடந்தது. இதற்காக ரஜினி மீசை, தாடியை எடுத்து மேக்கப் போட்டார். உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமாகி நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி மேக்கப் போட்டதால் அதை ஒரு சடங்காக குடும்பத்தினர் நடத்தினர்.
  • புரோகிதர்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. ரஜினிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. திருஷ்டி தேங்காயும் உடைத்தனர். இதுகுறித்து ரஜினி மனைவி லதா டுவிட்டரில் கூறும்போது, எனது கணவர் ரஜினி கோச்சடையான் படத்துக்கு மேக்கப் போட்டதை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
  • பூஜை செய்து ஆரத்தி எடுத்து தேங்காய் உடைக்கப்பட்டது. அது பெரிய நிகழ்வாக இருந்தது என்றார். கோச்சடையான் படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். நாயகி வேடத்துக்கு கத்ரினா கயூப்புடன் பேசி வருகின்றனர். சரத்குமார், ஆதி, நாசர், வடிவேலு, சினேகா, ஷோபனா என பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது.

பெற்றோருடன் செல்ல சேரன் மகள் தாமினி சம்மதம்!!

பெற்றோருடன் செல்ல சேரன் மகள் தாமினி சம்மதம்!!

dham3_0_0_0_0 
  1. காதல் விவகாரத்தில் சிக்கி கோர்ட் படியேறிய சேரனின் இரண்டாவது மகள் தாமினி, தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக நீதிபதிகளிடம் கூறியுள்ளார். தாமினியின் விருப்பத்தை ஏற்று நீதிபதிகளும் அவர் யாருடன் செல்ல விருப்பப்படுகிறாரோ அவருடனேயே செல்லலாம் என உத்தரவிட்டனர்.
  2. திரைப்பட இயக்குனர் சேரனின் இளைய மகள் தாமினி, சென்னையைச் சேர்ந்த சந்துரு என்பவரை காதலித்ததால், பிரச்னையானது. காதலன் சந்துரு பக்கம் தாமினி திடீரென சேர்ந்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று, சேரன் மீது புகார் செய்ததால், பிரச்னை பரபரப்பானது. இதையடுத்து, “என் மகள் தாமினியை, எனக்கு எதிராக சந்துரு தூண்டி விட்டுள்ளார். காதலனுடன் அனுப்பினால், என் மகளின் உயிருக்கு ஆபத்து; அவளை காப்பாற்றுங்கள் என, போலீசில் சேரன் புகார் கொடுத்தார்.
  3. கண்ணீர் பேட்டி
  4. இதற்கிடையே சேரன் தனது மனைவி செல்வராணியுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து சந்துரு நல்லவன் கிடையாது, அவன் பல பெண்களை ஏமாற்றியுள்ளான். என் மூத்த பெண்ணிடமும் பேஸ்புக்கில் காதல் சொல்லி வலை விரித்துள்ளான். எனது சொத்துக்காகத்தான் அவன் நல்லவன் போல் நடித்து என் பெண்ணை ஏமாற்றியுள்ளான். ஒரு கெட்டவனுக்கு எப்படி என் மகளை நான் கொடுக்க முடியும், ஒரு தந்தையாக யாரும் இதை செய்ய மாட்டார்கள் என்று கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார். அதேபோல் சேரனுக்கு ஆதரவாக அமீர், கரு.பழனியப்பன், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட இயக்குநர்களும் சந்துருவை பற்றியும், சந்துருவின் குடும்பம் பற்றியும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
  5. ஆட்கொணர்வு மனு தாக்கல்
  6. இந்நிலையில் தாமினியை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சந்துருவின் தாயார்‌ சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன்படி தாமினியும் கோர்ட்டில் ஆஜரானார்.
  7. காதலன் உடன் செல்ல விருப்பம்
  8. அப்போது நீதிபதிகள் முன்பு ஆஜரான தாமினி, தான் காதலன் சந்துரு உடன் தான் செல்வேன், பெற்றோர் உடன் செல்ல விரும்பவில்லை என்று பிடிவாதமாக கூறினார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதுவரை தாமினியை அவர் படித்த பள்ளி தாளாளர் வீட்டில் தங்க வைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  9. பெற்றோருடன் செல்ல விருப்பம்
  10. இதனையடுத்து வழக்கு விசாரணை இன்று(ஆகஸ்ட் 21ம் தேதி) நீதிபதிகள் தனபாலன் மற்றும் செல்வம் ஆகியோரது முன்பு வந்தது. அப்போது ஆஜரான தாமினி, தான் பெற்‌றோருடன் செல்ல விரும்புவதாக கூறினார். இதற்கு சந்துருவின் தாயார் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை மதியத்திற்கு மேல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த வழக்கு பின்னர் மதியத்திற்கு மேல் தொடர்ந்து விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தாமினி யாருடன் செல்ல விருப்பப்படுகி‌றாரோ அவருடனே செல்லலாம் என உத்தரவிட்டனர்.
  11. மனு தள்ளுபடி
  12. மேலும் சந்துருவின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திரை விமர்சனம் தலைவா

  1. தலைவா

  2. 5459a333-5b2c-40bb-bb8a-893432b1294d_S_secvpfமும்பை நகரின் தாராவி என்ற பகுதியில் தமிழர்களுக்கு பாதுகாவலராக சத்யராஜ். இதனால் அவரை சுட்டுக் கொல்ல மும்பையின் பிரபல தாதா திட்டமிடுகிறார். இந்த சண்டையில் சத்யராஜின் மனைவி ரேகா துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகிறார். இதனால் கோபம்கொண்ட சத்யராஜ் அந்த தாதாவை கொன்றுவிட்டு, இவர் தாதாவாக மாறுகிறார்.
  3. தாயை இழந்த தனது ஐந்து மகனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என அவரை நாசரிடம் கொடுத்து, ஆஸ்திரேலியோ அனுப்பி விடுகிறார். பின்னர் சத்யராஜ் சத்யராஜ் ‘அண்ணா’வாக தாராவி மக்களுக்கு தலைவனாகி தொண்டு செய்கிறார். தலைமறைவு வாழ்க்கையும் நடத்துகிறார்.
  4. இந்நிலையில், சத்யராஜின் மகனான விஜய் ஆஸ்திரேலியாவில் வளர்ந்து பெரியவனாகிறார். அங்கு தண்ணீர் வியாபாரம் செய்யும் விஜய், ‘தமிழ் பசங்க’ என்ற பெயரில் டான்ஸ் ஸ்கூலும் நடத்தி வருகிறார். இங்கு டான்ஸ் கற்றுக்கொள்ள வரும் அமலாபால் விஜய் மீது காதல் கொள்கிறார். இவர்களுடைய திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளும் அமலாபாலின் தந்தையான சுரேஷ், விஜய்யின் அப்பாவை சந்தித்தே ஆகவேண்டும் என கூறி, ஆஸ்திரேலியாவிலிருந்து மூவரும் மும்பை கிளம்பி வருகின்றனர்.
  5. மும்பை வரும் விஜய்-க்கு தன்னுடைய அப்பா பெரிய தாதா என்று தெரிய வருகிறது. விஜய், தன்னுடைய காதலை அப்பாவிடம் கூறுகிறார். இவருக்காக சுரேஷிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் சத்யராஜை நோக்கி அமலாபாலும், சுரேஷும் துப்பாக்கியை நீட்டுகிறார்கள். அப்போதுதான், விஜய்-க்கு அவர்கள் கிரைம் பிராஞ்ச் அதிகாரிகள் என்று தெரியவருகிறது.
  6. சத்யராஜ் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லும் வழியில் குண்டு வைத்து கொல்லப்படுகிறார். இதையடுத்து விஜய் தாராவி மக்களுக்கு தலைவனாகி, தனது தந்தை விட்டுவிட்டுப் போன மக்கள் பணியை தொடர்ந்து செய்கிறார். இறுதியில், விஜய்-அமலாபால் காதல் என்னவாயிற்று? தன் தந்தையை கொன்றவர்களை விஜய் பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை.
  7. மும்பையில் நடக்கும் கதை என்றாலே, நம்முடைய நினைவுக்கு வரும் படங்கள் ‘நாயகன்’, ‘பாட்ஷா’. இந்த இருபடங்களின் கலவையே ‘தலைவா’ என்று சொன்னால் மிகையாகாது. குறிப்பாக, சத்யராஜின் மனைவி சுடப்படும் காட்சி, சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு சரியான தீர்ப்பு வழங்கவேண்டும் என ஒய்.ஜி.மகேந்திரன், சத்யராஜிடம் முறையிடும் காட்சி என எண்ணற்ற காட்சிகள் நாயகனை நமக்கு நினைவுபடுத்துகிறது. விஜய், தலைவனாக மாறும்போது அவரது ஆதரவாளர்கள் எல்லாம் அவர் பின்னால் வருவது ‘பாட்ஷா’வை நினைவுபடுத்துகிறது,.
  8. முற்பாதியில் விஜய், இளமை துள்ளலோடு பளிச்சிடுகிறார். பிற்பாதியில் தலைவனாக உருவெடுக்கும்போது, வெள்ளைச் சட்டை, ஜீன்ஸ் பேண்ட் என ரொம்பவும் இளமையாக இருக்கிறார். விஜய்யோடு சேர்ந்து சந்தானம் செய்யும் காமெடி போரடிக்கிறது. சாம் ஆண்டர்சன் வரும் காட்சியும் ஆத்திரத்தை வரவழைத்திருக்கிறது.
  9. சத்யராஜ் அண்ணா வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார், அவர் நடிப்பு, முகபாவனை, பேசும் வசனங்கள் எல்லாம் அற்புதமாக இருக்கிறது. முதல்பாதியில் அமலாபாலுக்கு நடிப்பதற்கு ஸ்கோப் இருந்தாலும், இரண்டாம் பாதியில் அம்போவென வந்து போகிறார்.
  10. விஜய் என்கிற ஒரு மாஸ் ஹீரோவை வைத்து படம் பண்ணும்போது, அவரது ரசிகர்களை குஷிப்படுத்த எந்த மாதிரியான காட்சியமைப்பு வைக்க வேண்டும் என்பதில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர். விஜய் நடித்த சாதாரண படங்களில்கூட அவருடைய அறிமுக காட்சி அற்புதமாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் விஜய் அறிமுகம் ஆகும் காட்சி மகா சொதப்பல். அறிமுக பாடலும் வெறுப்பை வரவழைத்திருக்கிறது.
  11. ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ஏதும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையையும் பல படங்களில் காப்பி செய்ததுபோல் இருக்கிறது. விஜய்யும், அமலாபாலும் சேர்ந்து ஆடும் ரோப் டான்ஸ் பாடல் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
  12. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் கேமரா கண்கள் மும்பை மாநகரை அழகாக படம்பிடித்திருக்கிறது. இவரது திறமை பல காட்சிகளில் பளிச்சிடுகிறது.
  13. மொத்தத்தில் ‘தலைவா’ பலவீனமானவன்.

ஆதலால் காதல் செய்வீர்

ஆதலால் காதல் செய்வீர்

  • 21dfb688-1e0c-40ff-a681-52fb41c83cc3_S_secvpfவிளையாட்டு காதல், கருவாகி சாதியால், அரசியலால் சித்ரவதைப்பட்டு எப்படி அனாதைகளை உருவாக்குகிறது என்பதை தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் சாதீய காதலோடு யதார்த்தமாக சொல்ல வரும் படம்தான் ‘ஆதலால் காதல் செய்வீர்’.
  • நாயகி மனிஷாவிடம் நண்பனாக பழகிவரும் நாயகன் சந்தோஷ், மனிஷாவை ஒருதலையாய் காதலிக்கிறார். ஒருகட்டத்தில் தன் காதலை மனிஷாவிடம் நாயகன் சொல்ல, முதலில் மறுக்கும் மனிஷா, பிறகு அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். இவர்களுடைய காதல் இருவர் வீட்டுக்கும் தெரியாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது. மாமல்லபுரம் சென்று ஒருநாள் இருவரும் தனிமையில் இருக்கிறார்கள். இதனால், மனிஷா கர்ப்பமாகிறாள்.
  • இந்த விஷயம் வீட்டுக்குத் தெரியாமல் நண்பர்கள் உதவியுடன் அந்த கருவை கலைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், அது முடியாமல் போகவே, இருவருடைய பெற்றோர்களுக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது.
  • இவர்கள் ஒன்று சேர முதலில் சந்தோஷின் சாதியும், அவனுடைய சாதியைச் சேர்ந்தவர்களும் தடையாக வருகிறார்கள். சந்தோஷின் அப்பா அரசியலில் பெரும் செல்வாக்குடன் இருப்பதால் மனிஷாவின் பெற்றோர்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.
  • இதிலிருந்து தப்பித்து, இவர்களின் காதல் வெற்றி பெற்றதா? இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? மனிஷாவின் வயிற்றில் உருவான கரு என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.
  • சந்தோஷ், இன்றைய சூழலில் வாழும் யதார்த்தமான வாலிபனுக்குரிய தோற்றத்தில் அழகாக இருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். மனிஷா அட்டகாசமாக நடித்துள்ளார். இவரது நளினமான காதல் மிளிர்ச்சியும், ஆவேசமான பார்வையும் ரசிக்க வைக்கிறது.
  • மனிஷாவின் அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் மகள் களங்கப்பட்டு நிற்கும் போது கண்கலங்கி நம்மையும் கண்கலங்கச் செய்கிறார். சந்தோஷின் அம்மாவாக வரும் பூர்ணிமா பாக்கியராஜ் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவே. அதேநேரத்தில் மனிஷாவின் அம்மாவாக நடித்துள்ள துளசி அன்பு, ஆவேசம் என இரண்டும் கலந்த கலவையாக நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார்.
  • முதல்பாதியில் கல்லூரி காதல், நகைச்சுவை என படம் ஆரம்பித்து, படிப்படியாக தமிழகத்தின் சாதீய காதலை கையில் எடுத்து, படம் பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். ஆனால், கிளைமாக்ஸில் நாம் நினைத்ததைவிட வேறுவிதமாய் முடித்திருப்பதில் சிகரம் தொடுகிறார் இயக்குனர்.
  • படத்தின் தலைப்பை வைத்து இயக்குனரை எடைபோட முடியாது. சமூக அவலங்களை நையாண்டியுடன் குண்டூசியால் குத்திக் காட்டி, இன்றைய கால சூழலில் வாழும் காதலர்களுக்கு பாடம் புகட்டுகிறார்.
  • யுவன் சங்கர் ராஜா இசையில், பாடல்களும், பின்னணி இசையும் தாலாட்ட வைக்கிறது. மறைந்த கவிஞர் வாலி எழுதிய ‘தப்புத்தாண்டா’ பாடல் வரிகள் துள்ளல் போட வைக்கிறது. சூர்யாவின் ஒளிப்பதிவு, படத்துக்கு மேலும் வலுசேர்த்திருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் இவருடைய ஒளிப்பதிவில் மெருகு ஏறியிருக்கிறது.
  • மொத்தத்தில் ‘ஆதலால் காதல் செய்வீர்’ படம் அல்ல பாடம்.